நள்ளிரவில் தாறுமாறாக ஓடிய லாரி; மதுரையில் பரபரப்பு!
மதுரை:
மதுரையில் நள்ளிரவில் தாறுமாறாக ஓடிய சரக்கு லாரி, எதிரே வந்த லாரி, ஆட்டோ, 5 மோட்டார் சைக்கிள்கள், 20சைக்கிள்கள் மீது மோதி நன்றது. இந்த பயங்கர விபத்தில் ஒருவர் பலியானார்.
மதுரை வடக்கு வெளி வீதியில் உள்ள ஒரு லாரி நிறுவனத்திலிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரியானைக்கல் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே ஒரு சரக்கு லாரி வந்தது.
எதிரே வந்த லாரி திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, யானைக்கல் நோக்கி சென்றுகொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. அத்தோடு நில்லாமல், சாலையில் சென்று கொண்டிருந்த ஒருஆட்டோ மீதும் மோதியது.
தொடர்ந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த 5 மோட்டர் சைக்கிள்கள் மீதும், 20க்கும் மேற்பட்ட சைக்கிள்கள்மீதும் மோதி பிளாட்பாரத்தில் சிறிது தூரம் ஓடி நின்றது.
இந்த பயங்கர விபத்தில் மோட்டார் சைக்கிள் மீது அமர்ந்திருந்த ஒருவர் உடல் நசுங்கி அந்த இடத்திலேயேபிணமானார். அவர் யார் என்று தெரியவில்லை. நள்ளிரவில் லாரியொன்று தாறுமாறாக ஓடியதில் பிளாட்பாரத்தில்உள்ள கடைகளில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் பீதியில் சாலையில் இறங்கி ஓடி உயிர் தப்பினர்.
நள்ளிரவு நேரத்திலும் அப் பகுதியில் உள்ள பிளாட்பாரங்களில் உள்ள சாலையோர சாப்பாட்டுக் கடைகளில்ஏராளமானோர் சாப்பிட்டுக் கொண்டிருந்ததால் லாரி விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications