ஜெ.வை விரைவில் சந்திப்பேன்: பெர்னாண்டஸ்
மைசூர்:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவைச் சேர்ப்பது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுடன் விரைவில்பேச்சுவார்த்தை நடத்துவேன் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
பொதுச் செயல் திட்டத்துடன்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி மக்களவைத் தேர்தலைச் சந்திக்கும்.
திமுகவுடன் கூட்டணி முடிந்துவிட்டது. அவர்களுக்கு நாங்கள் கொடுத்த காலக்கெடு முடிந்துவிட்டதால், இனிபேச்சுவார்த்தை நடத்தப்படமாட்டாது. மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தைநடத்தமாட்டோம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவை சேர்ப்பது குறித்து அக் கட்சியின் பொதுச் செயலாளரான முதல்வர்ஜெயலலிதாவைச் சந்தித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன்.
மத்தியில் மூன்றாவது அணி என்பது நகைச்சுவையான ஒன்றாகும். இரண்டு நாட்களுக்கு முன் மத்திய அரசுஅறிவித்த சலுகைகள் தேர்தல் ஆதாயதத்துக்காக வெளியிடப்பட்டவை அல்ல. அரசு மேற்கொண்டு வரும்நற்பணிகளின் ஒரு பகுதியே அது என்றார்.