மாமாவுடன் பிரச்சனை: சொந்த ஊரை காலி செய்தார் ஜீவஜோதி

Subscribe to Oneindia Tamil

வேதாரண்யம்:

பிரபல சரவணபவன் ஒட்டல் அதிபர் ராஜகோபால் வழக்கில் தொடர்புடைய ஜீவஜோதி தனது சொந்த ஊரானதேத்தாக்குடியைக் காலி செய்து, தஞ்சாவூரில் குடியேறியுள்ளார். அங்கு இவருக்கு மன்னார்குடி குடும்பத்தைச்சேர்ந்த முக்கிய நபர் பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிகிறது.

தனது கணவர் பிரின்ஸ் சாந்தக்குமாரைக் கொலை செய்ததாக ஜீவஜோதி கூறிய புகாரையடுத்து, ராஜகோபால் மீதுவழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. ஜீவஜோதி தனது சொந்த ஊரானநாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள தேத்தாக்குடியில் வசித்து வந்தார்.

அண்மையில் ஜீவஜோதியின் தாய்மாமன் தசமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ஜீவஜோதி ஏராளமானபணத்தை ராஜகோபாலிடம் இருந்து பெற்றதாகக் கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். அதோடு வேதாரண்யம்பகுதியிலுள்ள ஒரு பஸ் அதிபரிடம் பெரும் பணத்தைக் கொடுத்து வைத்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த வழக்கில் ராஜகோபாலுக்கு ஆதரவாக தசமணி நிலை எடுத்துள்ளார். இதையடுத்து ஜீவஜோதியை, போயஸ்தோட்டத்தின் நம்பர் டூவின் சகோதரர் தஞ்சாவூருக்கு குடிபெயர வைத்துள்ளதாக செய்திகள் வருகின்றன.

தேத்தாக்குடியிலுள்ள வீட்டை காலி செய்துவிட்ட ஜீவஜோதி, தஞ்சை கிருஷ்ணா நகர் திருவள்ளுவர் தெருவிலுள்ளஒரு வீட்டிற்கு தனது தாய் மற்றும் தம்பியுடன் இரவோடு இரவாக குடிபெயர்ந்துள்ளார்.

அதை உறுதிப்படுத்தும் விதமாக, இதுவரை அவரது தேத்தாக்குடி வீட்டின் முன்பு காவலுக்கு இருந்த போலீஸாரும்இப்போது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+