மேய்ச்சல் மைதானங்கள்...

Subscribe to Oneindia Tamil

- தஞ்சையிலிருந்து சு.தா. அறிவழகன்

Cauvery delta reeling under drought
கருகி வரும் (வட்டத்திற்குள்) சம்பா பயிரை சோகத்துடன் காட்டும் விவசாயி
பொங்கல் வந்து விட்டது. உற்சாகத்தோடு பொங்கலைக் கொண்டாட கிராமங்கள் தயாராகி வருகின்றன.

மொத்தத் தமிழகமும் தித்திக்கும் பொங்கலை சுவைக்க காத்துக் கிடக்கும் நிலையில், காவிரித் தாயின் கருணைக்காகஏங்கிக் கிடக்கிறது ஒரு பகுதி தமிழ்நாடு.

தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் என காவிரி டெல்டா பகுதியில் எங்கு பார்த்தாலும் சோகம்தான். ஒரு பக்கம்கருகிக் கொண்டிருக்கும் பயிர்கள். அதைக் காப்பாற்ற முடியாத இயலாமையுடன் விவசாயிகள்.

இன்னொரு பக்கம் முற்றிலும் கருகிவிட்ட பயிர் நிலங்களில் மாடுகளையும் ஆடுகளையும் கனத்த இதயத்துடன்மேய்ச்சலுக்கு விட்டுள்ள விவசாயிகள். சம்பா நிலங்கள் இன்று வெறும் மேய்ச்சல் மைதானங்களாகிவிட்டன.

மழை பெய்யாதா, காவிரியில் தண்ணீர் வரவே வராதா என்ற ஏக்க விழிகளுடன் அந்த ஏழை விவசாயிகள்குடிசைகளின் முன் விரக்தியில் வீழ்ந்திருக்கிறார்கள்.

கடந்த ஆண்டும் காவிரி பொய்த்தது, வானம் மழை தர மறுத்தது, அரசியல் விளையாடியது, அதனால்பயிர்களோடு சேர்ந்து உயிர் விட்டனர் பல விவசாயிகள். இந்த ஆண்டும் அந்த சோகம் தொடர்கிறது.

மூன்று போகம் விளைவித்த பூமி, தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்ற பழம் பெருமை எல்லாம் இன்று காலிப்பெருங்காய டப்பாவாகிவிட்டது. கடன் வாங்கிச் சாப்பிடுவது, பொருள்களை எல்லாம் அடமானம் வைத்துநாட்களை ஓட்டுவது, அரசு கொடுக்கும் மானிய அரிசியை வாங்கி சமைப்பது என்ற அவல நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளார்கள் காவிரி டெல்டா விவசாயிகள்.

பொங்கலைக் கொண்டாட வசதியில்லாவிட்டாலும் மாடுகளுக்காவது கொம்புகளில் வர்ணம் பூசி அழகு பார்க்கஆசைப்பட்டாலும், அதற்கும் கூட காசில்லாத அவலம். என்னதான் செய்வார்கள் இந்த அப்பாவி விவசாயிகள்.

பொங்கலைக் கொண்டாட வேண்டிய உழவர்கள் விளைச்சல் இல்லாததால் மன உளைச்சலில் உழன்றுகொண்டுள்ளனர்.

என்று நமது துயர்கள் தீரும்? காவிரி இனிமேல் வரவே மாட்டாளா? ஒரு போகம் கூட இனிமேல்சாத்தியமில்லையா? என்ற அச்சக் கேள்விகள் இவர்களை அலைக்கழித்து வருகின்றன.

அரசியலும், அரசியல்வாதிகளும் ஆடும் சதிராட்டத்தில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறார்கள் இந்த காவிரித்தாயின் புதல்வர்கள். இவர்களது துயரைப் புரிந்து கொள்ள யாருக்கும் நேரமில்லை.

மீண்டும் பொற்காலம் திரும்ப வருமா? தஞ்சைத் தரணியிலும் புன்னகை தவழுமா என்பதற்கு காலம் தான் பதில் தரவேண்டும். பொங்கலை சுவைக்கும் முன், காவிரி விவசாயிகளின் கண்ணீரை ஒரு கணம் நினைத்துப் பார்ப்போம்.அதுதான் நாம் அந்த அப்பாவி விவசாயிகளுக்கு செய்யும் நன்றிக் கடனாக இருக்கும்.

ஏழை விவசாயிகளுக்கு வாழ்வு கிடைக்க, இந்த தைத் திங்களாவது ஒரு வழி காட்ட வேண்டுமாய் இயற்கையைமனமுருகி வேண்டுவோம்!

Mail this to a friend  Post your feedback  Print this page 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+