காவிரி நீர் பெறுவோம்: ஜெ. பொங்கல் வாழ்த்து
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில், காவிரி நீரில் நமக்குரிய பங்கைபெற்றேத் தீருவோம் என்று கூறியுள்ளார்.
காவேரி நீரில் நமக்குரிய பங்கை பெற்றேத் தீருவோம் என்று இந் நாளில் உறுதி ஏற்போம். வரும் தடைகளைவெல்வோம், வாகை சூடுவோம் என்று கூறியுள்ளார்.
கருணாநிதி வாழ்த்து:
திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
அயராது அரசுக்கும், மக்களுக்குமாக உழைத்த அலுவலர்கள், ஆசிரியப் பெருமக்கள் அநியாயமாகப் பழிவாங்கப்படுகிறார்கள். அவர்களோடு சேர்ந்து விவசாயிகளும் சேர்ந்து பொங்குகிறார்கள். பொங்கலோ, பொங்கல்!
இந்தியப் பிரதமர் ஹைதராபாத்தில் சொன்னதுபோல் பொங்கலையொட்டி கதிரவன் திசை மாறட்டும். அவன் ஒளிதெற்கிலிருந்து வடக்கு நோக்கி பரவட்டும். பின்னடைவுகள் நீங்கி முற்போக்கு முகிழ்க்கட்டும். முடிதிருத்தும்தொழிலாளர் மூளியாகிப்போன இந்த அரசின் முடியைத் திருத்தட்டும் என்று கூறியுள்ளார்.
வைகோ:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், திராவிட இயக்கத்திற்கு எதிராகஇன்று அறைகூவல்களைச் சந்தித்து, எதிரிகளை வீழ்த்தவும், வாகை சூடவும் தேவையான ஒற்றுமையைப் பெறபாடுபடுவோம் என்று தெரிவித்துள்ளார்.