For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி நீர் பெறுவோம்: ஜெ. பொங்கல் வாழ்த்து

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில், காவிரி நீரில் நமக்குரிய பங்கைபெற்றேத் தீருவோம் என்று கூறியுள்ளார்.

அதன் விவரம்: உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களின் இல்லங்களில் எல்லாம் உவப்புடன் கொண்டாடப்படும்ஒப்பற்ற விவா பொங்கல் விழா. இத் திருநாளில் அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்களைமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவேரி நீரில் நமக்குரிய பங்கை பெற்றேத் தீருவோம் என்று இந் நாளில் உறுதி ஏற்போம். வரும் தடைகளைவெல்வோம், வாகை சூடுவோம் என்று கூறியுள்ளார்.

கருணாநிதி வாழ்த்து:

திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

அயராது அரசுக்கும், மக்களுக்குமாக உழைத்த அலுவலர்கள், ஆசிரியப் பெருமக்கள் அநியாயமாகப் பழிவாங்கப்படுகிறார்கள். அவர்களோடு சேர்ந்து விவசாயிகளும் சேர்ந்து பொங்குகிறார்கள். பொங்கலோ, பொங்கல்!

இந்தியப் பிரதமர் ஹைதராபாத்தில் சொன்னதுபோல் பொங்கலையொட்டி கதிரவன் திசை மாறட்டும். அவன் ஒளிதெற்கிலிருந்து வடக்கு நோக்கி பரவட்டும். பின்னடைவுகள் நீங்கி முற்போக்கு முகிழ்க்கட்டும். முடிதிருத்தும்தொழிலாளர் மூளியாகிப்போன இந்த அரசின் முடியைத் திருத்தட்டும் என்று கூறியுள்ளார்.

வைகோ:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், திராவிட இயக்கத்திற்கு எதிராகஇன்று அறைகூவல்களைச் சந்தித்து, எதிரிகளை வீழ்த்தவும், வாகை சூடவும் தேவையான ஒற்றுமையைப் பெறபாடுபடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X