பா.ம.க. அமைச்சர்கள் இன்று ராஜினாமா
சென்னை:
பா.ம.கவைச் சேர்ந்த மத்திய ரயில்வேதுறை இமையமைச்சர் ஏ.கே. மூர்த்தி, உணவுப் பதப்படுத்துதல் துறைஇணையமைச்சர் சண்முகம் ஆகியோர் இன்று தங்கள் பதவிகளை ராஜினாமா செய்கின்றனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிவிடும் ராமதாசின் முடிவை மூர்த்தி எதிர்த்ததாகக் கூறப்படுகிறது.இந் நிலையில் இன்று டெல்லி கிளம்பிய மூர்த்தி மாலையே தனது ராஜினாமாவை பிரதமர் வாஜ்பாயிடம் தரப்போவதாகத் தெரிவித்தார்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நானும் அமைச்சர் சண்முகமும் பதவிகளை இன்று ராஜினாமா செய்கிறோம். எங்கள் தலைவர் ராமதாஸ் எடுத்தமுடிவுக்கு கட்டுப்பட்டு பதவி விலகுகிறோம். இதனால் பா.ஜ.கவுக்கு நாங்கள் துரோகம் செய்ததாக அர்த்தமில்லை.
ரயில்வே அமைச்சர் நிதிஷ்குமாரைச் சந்தித்து, தமிழக ரயில்வே திட்டப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறுகேட்டுக் கொள்வேன் என்றார்.












Click it and Unblock the Notifications