பா.ம.க. முடிவுக்கு விடுதலை சிறுத்தைகள் பாராட்டு
சென்னை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி விலகியிருப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள்கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பூந்தமல்லி பொடா நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோவைப் பார்ப்பதற்காகஅங்கு வந்தார் திருமாவளவன். வைகோவைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசுகையில்,தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பா.ம.க. விலகியது பாராட்டுக்குரியது.
திமுக கூட்டணியில் நாங்களும் இடம் பெறுவோம். அதே கூட்டணியில் பா.ம.க. இருப்பதால் எங்களுக்குப்பிரச்சினை இல்லை. திமுக கூட்டணியில் நாங்களும் ஒரு அங்கம், அதுபோல அவர்களும் ஒரு அங்கம்அவ்வளவுதான்.
சமீபத்திய அரசியல் சூழ்நிலைகள், மதச்சார்பற்ற கட்சிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்துள்ளன. இதில்கம்யூனிஸ்ட் கட்சிகளும் சேர்ந்துள்ளன. தலித் மக்களின் நலனுக்காக பாடுபடும் எந்த மதச்சார்பற்றகூட்டணியிலும்நாங்கள் இடம் பெறுவோம் என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications