For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிவகங்கையில் ப.சிதம்பரம் போட்டி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து, காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்ப.சிதம்பரம் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடப் போகிறார்.

மூப்பனார் உயிருடன் இருந்தபோது அதிமுகவுடன் கூட்டணி சேர அவர் முடிவு செய்தபோது, அதை எதிர்த்து தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி புதிய அமைப்பை உருவாக்கியவர் ப.சிதம்பரம். பின்னர் அந்தஅமைப்பை காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்ற பெயரில் அரசியல் கட்சியாக மாற்றினார்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றது காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை.வள்ளல் பெருமான் மற்றும் புரசை ரங்கநாதன் ஆகியோர் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் எம்.எல்.ஏக்களாகஉள்ளனர்.

கடந்த ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தது. இதைத் தொடர்ந்து ப.சிதம்பரத்தையும்காங்கிரஸில் இணையுமாறு பல்வேறு காங்கிரஸ் தலைவர்களும் கோரி வந்தனர். இந்தப் பின்னணியில் சமீபகாலத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சில முறை சந்தித்துப் பேசினார் ப.சிதம்பரம். இருப்பினும்காங்கிரஸுடன் இணைவதாக இல்லை, காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து செயல்படுவோம் என்று கூறினார்ப.சிதம்பரம்.

இந் நிலையில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியிலிருந்து ப.சிதம்பரம்போட்டியிடலாம் என்று தெரிகிறது. திமுக-காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளராக அவர் போட்டியிடக் கூடும்என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி வேட்பளராக போட்டியிட்டாலும்கூட அவர் காங்கிரஸ் கட்சியின் கைசின்னத்திலேயே போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ப.சிதம்பரத்திற்கு ஒதுக்கப்படும் தொகுதி, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கையில்சேராது என்றும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக தரப்பு உறுதி அளித்துள்ளதாகவும், ப.சிதம்பரத்திற்கு தொகுதிஒதுக்குமாறு சோனியா காந்தியே கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X