திருச்சியில் உலக அமைதிக்காக 417 படிகளை உருண்டே கடந்தவர்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

Rolling for World peaceஉலக அமைதியை வலியுறுத்தி, திருச்சியில் உள்ள மலைக்கோட்டை கோவிலில் உள்ள 417 படிகளையும் உருண்டுகொண்டே ஏறி, இறங்கி சாதனை படைத்தார் கரூரைச் சேர்ந்த நபர்.

கரூர் நங்கவரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். 47 வயதான இவர் உலக அமைதி, வளர்ச்சி ஆகியவற்றைவலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும், திருச்சி மலைக்கோட்டையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலுக்குஉருண்டுகொண்டே ஏறிச் சென்று வழிபட்டு விட்டு மீண்டும் உருண்டவாறே கீழே இறங்குவது வழக்கம்.

7-வது முறையாக இந்த ஆண்டும் தனது உருளலை ஆரம்பித்தார் நாகராஜன். மொத்தம் உள்ள 417 படிகளையும்45 நமிடத்தில் ஏறி, இறங்கினார் நாகராஜன். மலையின் உயரம் 273 அடி ஆகும்.

இதற்கு முன்பு கரூரில் உள்ள அய்யர் மலை என்ற மலையை தொடர்ந்து 19 ஆண்டுகள் உருண்டு கொண்டே ஏறி,இறங்கி வந்துள்ளார் நாகராஜன்.

விரைவில் ஈரோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவில், பழனி முருகன் கோவில் ஆகியவற்றிலும் இதேபோலசெய்து சாதனை படைக்க முடிவு செய்துள்ளார் நாகராஜன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+