கருணாநிதி- இ.கம்யூ தலைவர் இன்று சந்திப்பு
சென்னை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பர்தான் இன்று சென்னை வந்தார். மாலையில் அவர் திமுகதலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசுகிறார்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இடம் பெறுகிறது. இதுதொடர்பாக கருணாநிதியுடன் பேச்சு நடத்துவதற்காக அக் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர்ஏ.பி.பர்தான் இன்று சென்னை வந்தார்.
விமான நலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாலையில் கருணாநிதியை சந்திப்பேன்.
மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட இது சரியான நேரம். திமுக தலைவர் கருணாநிதியும்சரியான நேரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறி மதச்சார்பற்ற கட்சிகளைஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
எங்களது அணி வெற்றி பெற்றால் யார் பிரதமர் என்பதை இப்போது கூற முடியாது. எந்தக் கட்சிக்குபெரும்பான்மையான எம்.பிக்கள் இருப்பார்களோ அந்தக் கட்சிதான் பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும்என்றார்.












Click it and Unblock the Notifications