முரசொலி மாறனுக்கு சென்னையில் சிலை: கருணாநிதி
சென்னை:
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனுக்கு சென்னையில் உள்ள முரசொலி அலுவலக வளாகத்தில்சிலை அமைக்கப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னையில், முரசொலி அறக்கட்டளையின் சார்பில் கலைஞர் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் திரைப்படஇயக்குநர் எஸ்.பி.முத்துராமன், மறைந்த டாக்டர் பி.ராமமூர்த்தி, ஓவியர் செல்லப்பன் ஆகியோருக்கு கலைஞர்விருதையும், ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொற்கிழியையும் கருணாநிதி வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், மறைந்த முரசொலி மாறனுக்கு, முரசொலி அலுவலக வளாகத்தில் சிலைஅமைக்கப்படும். சிலை வைத்துத்தான் மாறனை நினைக்க வேண்டும் என்பதில்லை, சிலையாக எப்போதும் எனதுநெஞ்சத்தில் மாறன் இருக்கிறார். மாறனை நான் நினைக்காத நாளில்லை, நிமிடமில்லை என்றார் கருணாநிதி.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு, கவிஞர்வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications