கருணாநிதி மீது தமிழக அரசு மீண்டும் ஒரு வழக்கு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி மீது மீண்டும் ஒரு அவதூறு வழக்கை தமிழக அரசு தொடர்ந்துள்ளது.
சிந்தாரிப்பேட்டையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய கருணாநிதி, கோடிக்கணக்கில் பணம் கைமாறியதைமறைக்கவே, தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது என்று பேசியதாகவும், அதை முரசொலிபத்தரிக்கையில் வெளியிட்டதாகவும் இந்த அவதூறு வழக்கை தமிழக அரசு தொடர்ந்துள்ளது.
இதன் மூலம் தமிழக அரசை கருணாநிதியும் முரசொலி செல்வமும் அவமதித்துவிட்டதாக சென்னை 3வது செஷன்ஸ்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று நீதிபதி ராமலிங்கம் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. கருணாநிதி, செல்வம் சார்பில்ஆஜரான வழக்கறிஞர் ராஜ இளங்கோ, இந்த வழக்கில் இருவரும் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்று கோரி மனுத் தாக்கல் செய்தார்.
இது குறித்து பதில் தெரிவிக்க அரசு வழக்கறிஞர் கால அவகாசம் கேட்டதால், நீதிபதி ராமலிங்கம் வழக்கை மார்ச்மாதம் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications