கருணாநிதியுடன் ராமதாஸ் சந்திப்பு: பர்தான் வருகை
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று சந்தித்துநாடாளுமன்றத் தேர்தல் இடங்கள் பகிர்வு குறித்து ஆலோசனை நடத்தினார்.
அண்ணா அறிவாலயத்தில் நடந்த இச் சந்திப்பின்போது திமுக தரப்பில் அன்பழகன், ஸ்டாலின், துரைமுருகன்ஆகியோர் உடனிருந்தனர்.
ராமதாசுடன் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணியும் உடனிருந்தார். இரு தரப்பினரும் சுமார் அரை மணி நேரம் பேச்சுநடத்தினர்.
கடந்த 12ம் தேதி திமுக கூட்டணியில் சேர்ந்த பின்னர் கருணாநிதியை ராமதாஸ் சந்திப்பது இது இரண்டாவதுமுறையாகும். கூட்டணியில் பா.ம.கவுக்கு 5 முதல் 6 இடங்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது.
கூட்டத்திற்குப் பின் நிருபர்களிடம் பேசிய ராமதாஸ், தேர்தல் வியூகம் பற்றித் தான் பேசினோம், இடம் பகிர்வுகுறித்து பேசவில்லை. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தமிழகம் வந்தால் அவரைச் சந்தித்துப் பேசுவதுதொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார்.
ஆனால், கருணாநிதியும் ராமதாசும் இடப் பகிர்வு பேச்சு நடத்தியதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இ.கம்யூ தலைவர் சந்திப்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பர்தான் இன்று சென்னை வந்தார். மாலையில் அவர் திமுகதலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசுகிறார்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இடம் பெறுகிறது. இதுதொடர்பாக கருணாநிதியுடன் பேச்சு நடத்துவதற்காக அக் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர்ஏ.பி.பர்தான் இன்று சென்னை வந்தார்.
விமான நலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாலையில் கருணாநிதியை சந்திப்பேன்.
மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட இது சரியான நேரம். திமுக தலைவர் கருணாநிதியும்சரியான நேரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறி மதச்சார்பற்ற கட்சிகளைஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
எங்களது அணி வெற்றி பெற்றால் யார் பிரதமர் என்பதை இப்போது கூற முடியாது. எந்தக் கட்சிக்குபெரும்பான்மையான எம்.பிக்கள் இருப்பார்களோ அந்தக் கட்சிதான் பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும்என்றார்.