கூட்டணி அரசியல்தான் "பெஸ்ட்": ப.சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

கோவை:

இந்தியாவுக்கு கூட்டணி அரசியல்தான் சிறந்தது. இனிமேல் எதிர்காலத்தில் மத்தியில் கூட்டணி ஆட்சிதான் நடக்கும், தனிப்பட்டஎந்தக் கட்சிக்கும் இனிமேல் தனிப் பெரும்பான்மை பலம் கிடைக்க வாய்ப்பே இல்லை என்று காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைபொதுச் செயலாளர் ப.சிதம்பரம் கூறினார்.

கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தற்போது நாடு முழுவதும் ஏற்பட்டு வரும் அரசியல் மாற்றங்கள்,ஜனநாயக அரசியல் முதிர்ச்சியையே காட்டுகிறது. இந்தியாவில் இனிமேல் கூட்டணி அரசியல்தான் சாத்தியமாகும்,அதுதான்நமக்கு சிறந்ததும் கூட.

தனிப்பட்ட கட்சி எதற்கும் இனிமேல் மத்தியில் பெரும்பான்மை கிடைக்காது. கூட்டணி அரசினால் மட்டுமே 5 ஆண்டு காலம்முழுமையாக ஆட்சி செய்ய முடியும்.

கூட்டணிகள் ஏற்படுவதையும், கூட்டணிகளில் மாற்றங்கள் ஏற்படுவதையும் சந்தர்ப்பவாதமாக மக்கள் நினைக்கக் கூடாது.நமக்குச் சரியான கூட்டணி எது என்பதைப் பார்த்து வாக்களிக்க மக்கள் முன்வர வேண்டும்.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கூட்டணிக் கட்சிகள் கூட்டணிகளை மாற்றுவது சாதாரணமான ஒன்று. அரசு அமைப்பதற்காககூட்டணிகள் மாறும் கட்சிகளும் அங்கு உண்டு. இது இயற்கையான ஒன்றுதான்.

தேசிய அளவில் பா.ஜ.க, காங்கிரஸ் தலைமைகளில் இரண்டே இரண்டு கூட்டணிகள் மட்டுமே இருக்க வேண்டும். பா.ஜ.க. முதன்முறையாக ஆட்சிக்கு வந்தபோது 13 நாள் மட்டுமே பதவி வகித்தது. அடுத்த முறை வந்தபோது 13 மாதங்கள் ஆட்சி நடத்தியது.இப்போது 5 ஆண்டு காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்துள்ளது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக்கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் 5 ஆண்டு பதவிக் காலத்தை முழுமையாக பூர்த்தி செய்யும்என்றார் ப.சிதம்பரம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+