திமுக கூட்டணியில் திருமாவளவன்: முஸ்லீம் லீக்குக்கு வேலூர் தொகுதி
சென்னை:
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு திமுக கூட்டணியில் இணைய முன் வந்துள்ளதாகத் தெரிகிறது. அதே போல கூட்டணியில்இணைந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக்குக்கு வேலூர் மக்களவைத் தொகுதியை திமுக வழங்கியுள்ளது.
கருணாநிதியை இன்று, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் காதல் மொய்தீன் சந்தித்துப் பேசினார். அப்போதுஅந்தக் கட்சிக்கு வேலூர் தொகுதியை வழங்குவதாக கருணாநிதி அறிவித்தார்.
இதனால் பா.ம.கவுக்கு வேலூர் அல்லது அரக்கோணம் என்று வழங்கப்பட்ட சாய்ஸ் சுருங்கிவிட்டது. முஸ்லீம் லீக்குக்கு வேலூர்போய்விட்டதால் அரக்கோணத்தைத் தான் பா.ம.க. வைத்துக் கொள்ள வேண்டும்.
இதற்கிடையே, விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவனும் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். முதலில்விடுதலை சிறுத்தைகள் மற்றும் புதிய தமிழகம் ஆகியவை கூட்டணியில் இணைந்தாலும் இடங்கள் கொடுத்த முடியாது என திமுககூறி வந்தது. இதையடுத்து திமுகவுக்கு எதிராக கடந்த சில நாட்களாக மிகக் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்து வந்தார்திருமாவளவன்.
புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியுடன் இணைந்து தனித்து போட்டியிடுவது குறித்தும் தனது கட்சியினருடன்ஆலோசனை நடத்தி வந்தார். இந் நிலையில் அவரை அதிமுக கூட்டணிக்கு இழுக்கவும் முயற்சிகள் நடந்தன.
இந் நிலையில் திருமாவளவனிடம் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் ரகசியமாய் பேச்சு நடத்தி அவருக்கு தூண்டில்போட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து திமுக தலைவர் கருணாநிதியை திருமாவளவன் இன்று சந்தித்துப் பேசினார்.
தொகுதி ஒதுக்கீடு குறித்து எதுவும் இறுதி செய்யப்படாவிட்டாலும், கடைசியில் திருமாவளவனுக்கு கடலூர் தொகுதிஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது. அதே போல டாக்டர் கிருஷ்ணசாமிக்கு தென்காசி தொகுதி தரப்படலாம் என்றும்கூறப்படுகிறது.
அதே போல எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பன் இன்று தனது கட்சியின் எம்.பி. ஜகத்ரட்சகனுடன் வந்துகருணாநிதியை சந்தித்தார். கடந்தமுறை ஜகத்ரட்சகன் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார் என்பதுகுறிப்பிடத்தக்கது. இம்முறையும் அவருக்கு சீட் தரப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
முஸ்லீம் கட்சியுடன் தலித் கட்சிகளுக்கும் இரு இடங்கள் தர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதால் காங்கிரசுக்கு தர இருந்த 12இடங்களை திமுக 10 ஆகக் குறைத்துவிடும் என்று தெரிகிறது.