பிரதமரின் தங்கை பேரன் கொலை: ஜெ., கருணாநிதி இரங்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிரதமர் வாஜ்பாயியின் தங்கை பேரன் ஈவ் டீசிங்கை கண்டித்ததால் படுகொலை செய்யப்பட்டதற்கு, வாஜ்பாய்க்கு,முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்து செய்தி அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வாஜ்பாய்க்கு அனுப்பியுள்ள செய்தியில், தங்களது சகோதரியின் பேரன் மனீஷ் மிஸ்ரா,ஈவ் டீசிங்கைத் தட்டிக் கேட்டதால் கொலை செய்யப்பட்டது குறித்து அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்,அதிர்ச்சியுற்றேன்.
விஷமிகள் செய்த இந்த படுகொலைக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, தங்களுக்கும் தங்களது சகோதரிகுடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதேபோல் திமுக தலைவர் கருணாநிதியும் வாஜ்பாய்க்கு இரங்கல் தந்தி அனுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications