பிப்.6ம் தேதி மக்களவை கலைப்பு
டெல்லி:
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் அடுத்த மாதம் 3ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இதனையடுத்து 6ம் தேதிமக்களவை கலைக்கப்படுகிறது.
பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இத் தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன. இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்படி, மக்களவை நாளை கூடுகிறது.
நாளை மறுநாள் மத்திய ரயில்வே அமைச்சர் நிதீஷ்குமார் இடைக்கால ரெயில்வே பட்ஜெட்டைத் தாக்கல்செய்கிறார். பிப்ரவரி 3ம் தேதி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அன்றைய தினமேநிறைவேற்றப்படும். 6ம் தேதி மக்களவை கலைக்கப்படும்.
மக்களவையைக் கலைக்கக் கோரும் தீர்மானத்தை வாஜ்பாய் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் வழங்கினார்.அப்போது துணைப் பிரதமர் அத்வானி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்,நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் உடனிருந்தனர். இச் சந்திப்பு 15 நிமிடம்நீடித்தது.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படமாட்டாது என்று சுஷ்மா சுவராஜ்பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications