விரைவில் பா.ஜ.கவுடன் தொகுதி பங்கீடு: ஜெ
சென்னை:
அதிமுக-பா.ஜ,க. கட்சிகளுக்கு இடையே விரைவில் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படும் என்று முதல்வர்ஜெயலலிதா கூறினார்.
இன்று தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் அவர் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.
முன்னதாக தொகுதிப் பங்கீடு குறித்து அதிமுக, பா.ஜ.க. தேர்தல் குழுவினர் இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைநடத்தினர். சென்னை லாயிட்ஸ் சாலையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் இப்பேச்சுவார்த்தைநடைபெற்றது.
அதிமுக சார்பில் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், பொன்னையன், ஜெயக்குமார் ஆகியோரும், பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் தேசியச் செயலாளர் இல.கணேசன், தமிழக பா.ஜ.க. தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பேச்சுவார்த்தைக்குப் பின் நிருபர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், தொகுதிப் பங்கீடு குறித்த 2ம் கட்டபேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது. எந்தெந்தத் தொகுதிகளில் பா.ஜ.க. போட்டியிடும் என்பது ஓரிரு தினங்களில்முடிவாகும் என்றார்.