ஏப்ரல் 24, 25ல் மருத்துவம், பொறியியல் நுழைவுத் தேர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு ஏப்ரல் மாதம் 24 மற்றும்25ம் தேதிகளில் நடைபெறுகிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும்வினாத்தாள்களில் கேட்கப்படும் கேள்விகளின் எண்ணிக்கை குறித்தும் முடிவு செய்துள்ளனர். அதன்படி,அக்கடாமிக் பிரிவில் உயிரியல் பாடத்தில் 140 கேள்விகளும், இயற்பியல் பாடத்தில் 120 கேள்விகளும்,கணிதத்தில் 120 கேள்விகளும் கேட்கப்படும்.
தொழில் பாடப்பிரிவில், வேதியியல், பொருளாதாரம், இயற்பியல் ஆகிய பாடங்களில் தலா 120 கேள்விகள்இடம் பெறும். கடந்த ஆண்டு 36 இடங்களில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு கூடுதலாகநெய்வேலி, நாகப்பட்டினம் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய இடங்களிலும் நுழைவுத் தேர்வு நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications