கருணாநிதியின் அன்பில் நனைந்த வைகோ!!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு சிறையில் வயிற்றுப் போக்கு ஏற்பட்டதால் உடல் நலம்பாதிக்கப்பட்டுள்ளார். இந் நிலையில் தன்னைக் காண வந்து நீதிமன்றத்தில் அரை மணி நேரம் காத்திருந்த திமுகதலைவர் கருணாநிதியைக் கண்டதும் அவர் கண்கலங்கினார். இதையடுத்து அவரது கண்ணீரைத் துடைத்தகருணாநிதி, முகத்தை வருடிக் கொடுத்து தன் அன்பை வெளிப்படுத்தினார்.

நேற்று முன் தினம் பூந்தமல்லி பொடா நீதிமன்றம் வர வேண்டிய நிலையில், வேலூர் சிறையில் வயிற்றுப் போக்கால்பாதிக்கப்பட்டார் வைகோ. இதனால் மயக்கம் ஏற்பட்ட நீதிமன்ற செல்லில் படுத்து உறங்கியுள்ளார்.

நீதிமன்றம் செல்ல தாமதமாகிவிட்டதாக போலீசார் கூறியதையடுத்து மிகுந்த சிரமத்துக்கிடையே தன்னை தயார்செய்து கொண்டு வேனில் ஏறி, 4 மணி பயணத்துக்குப் பின் பூந்தமல்லி வந்தார். உடல் நலக் குறைவால்வழக்கமான தன் உற்சாகத்தை இழந்திருந்தார் வைகோ.

வழக்கமாக வைகோ வரும் நேரத்தைக் கணக்கிட்டு பகல் 2.30 மணிக்கே பொன்முடி, துரைமுருகனுடன் நீதிமன்றம்வந்துவிட்டார் கருணாநிதி. ஆனால், வைகோ வராததால் நீதிமன்ற வளாகத்தில் இருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தார்.

இந் நிலையில் 3 மணிக்கு வைகோவின் வேன் அங்கு வந்து நுழைந்தது. அப்போது அவருடன் பேச யாரையும்போலீசார் அனுமதிக்காததால் கருணாநிதி வந்திருப்பதை அறியாத வைகோ நீதிமன்றத்துக்கு நுழைந்தார்.

அங்கே கருணாநிதி உட்கார்ந்திருப்பதைக் கண்டதும் அதிர்ந்தவர், அவரிடம் ஓடினார்.

இங்கே ஏன் வந்தீங்க.. எதுக்காக உடம்பை வருத்துறீங்க.. எனக்கு ஏதாவது தகவல் இருந்தால் சொல்லி அனுப்பவேண்டியது தானே?. இங்கே வந்து உட்காரனுமா, அரை மணி காத்திருக்கனுமா, இதுவரை நான் உங்களைகஷ்டப்படுத்தியது போதாதா என்று படபடவென பேசிய வைகோவை கருணாநிதி, இல்லப்பா என்று பேசிசமாதானப்படுத்துவதற்குள் வைகோவின் கண்களில் இருந்து நீர் வழிய ஆரம்பித்துவிட்டது.

கண்களில் இருந்து தொடர்ந்து நீர் வழிய, அதைத் துடைத்த கருணாநிதி வைகோவின் முகத்தை வாஞ்சையோடுதடவியபடி பேசினார். இதைப் பார்த்த துரைமுருகன், பொன்முடியும் கண் கலங்கினர்.

அப்போது பேசிய கருணாநிதி, நிபந்தனை, அது இதுன்னு சொல்லி வெளியே வர மாட்டேன்னுசொல்லீருவீங்களோன்னு பயந்துட்டேம்பா. அது தான் நேராவே வந்துட்டேன். வெளியே வந்துரு.. உடம்பைவருத்தாதே.. வந்துரு வைகோ என்றார்.

கண் கலங்கியபடியே அப்பாவிடம் மகன் தலையாட்டுவது மாதிரி தலையை ஆட்டினார் வைகோ.

இதையடுத்தே தனக்கு நீதிமன்றத்தில் வயிற்றுப் போக்கு ஏற்பட்டதையும், இதனால் நீதிமன்றம் வரத்தாமதமானதையும் வைகோ கருணாநிதியிடம் கூறினார். பேசாமா வெளியே வந்துருங்க வைகோ.. போதும் இந்தகஷ்டம் என உத்தரவிடும் தொனியில் கூறிவிட்டு கருணாநிதி கிளம்ப, அவரை கைத்தாங்கலாக கூட்டி வந்துபொன்முடியின் டாடா சபாரியின் ஏற்றிவிட்டார்.

கிளம்பும்போது வைகோவின் கையை இழுத்துப் பிடித்து உடம்பு, ஜாக்கிரதை என்றபடி கிளம்பினார். கார் போகும்திசையை நெடுநேரம் பார்த்தபடி நின்றிருந்தார் வைகோ. அவர் கண்களில் மீண்டும் நீர்!!!

Mail this to a friend  Post your feedback  Print this page 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+