சென்னை வாக்காளர் பட்டியலை ஒட்டுமொத்தமாக திருத்த உத்தரவு
சென்னை:
சென்னையில் உள்ள 14 சட்டசபைத் தொகுதிகளுக்குமான வாக்காளர் பட்டியலை திருத்தியமைக்க தலைமைத்தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியில், பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும், லட்சக்கணக்கானபோலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் கூறியிருந்தன.
இதையடுத்து தமிழகம் முழுவதும் ஏராளமான போலி வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியலை முழுவதுமாக திருத்தியமைக்க தற்போது தலைமைத் தேர்தல்ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியலை பார்வையிட வந்த மத்திய தேர்தல் ஆணைய குழுவினர்கொடுத்த அறிக்கையின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதில் 14 தொகுதிகளில் 4 முதல் 5 தொகுதிகளில் மக்கள் தொகையை விட வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாகஇருப்பது தெரிய வந்துள்ளது.
இதனால் சென்னை மாவட்டத்தில் உள்ள 14 சட்டசபைத் தொகுதிகளிலும் முழுவதுமாக வாக்காளர் பட்டியலைதிருத்தியமைக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வரும் 15ம் தேதிக்குள் இந்தப் பணிகளைமுடிக்குமாறும் அது மாநில தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கியிடம் கேட்டபோது, மாநிலம் முழுமைக்கும்வாக்காளர் பட்டியலை திருத்துமாறு தேர்தல் ஆணையம் கூறவில்லை. சென்னையில் உள்ள சில தொகுதிகளில்கூடுதல் வாக்காளர்களை நீக்குமாறு மட்டுமே உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications