கோவை அருகே யானை மிதித்து 8 வயது சிறுமி பலி
கோவை:
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி என்ற இடத்தில் யானை மிதித்து சிறுமி பரிதாபமாகப் பலியானாள்.
சேலத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் தனது மனைவி, 8 வயது மகள் நித்யாவுடன் கோவைக்கு சுற்றுலா வந்திருந்தார்.ஆலந்தூர் அருகே உள்ள வெள்ளியங்கிரி என்ற இடத்தில் உள்ள கோவை குற்றாலம் என்ற நீர்வீழ்ச்சியைப்பார்வையிட குடும்பத்துடன் இவர்கள் சென்றிருந்தனர்.
நீர் வீழ்ச்சியின் அருகில் ஒரு காட்டு யானை இவர்களை துரத்தியது.
யானையிடமிருந்து தப்ப இவர்கள் ஒரு புதருக்குள் பதுங்கினர். ஆனால் ஜெகதீஷின் மகள் நித்யா மட்டும்யானையிடம் சிக்கிக் கொண்டாள். நித்யாவை யானை மிதித்ததில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அந்தச் சிறுமிபரிதாபமாக பலியானார்.
தங்கள் கண் முன்பே செல்ல மகள் யானையிடம் சிக்கி இறந்ததைப் பார்த்த ஜெகதீஷ் தம்பதியினர் கதறித் துடித்தனர்.
இந்தப் பகுதியில் யானை தாக்கி இதுவரை 3 பேர் இறந்துள்ளனர். காட்டு யானைகள் நடமாட்டத்தைக்கட்டுப்படுத்த வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததும், இப் பகுதியில் காட்டு யானைகள்நடமாட்டம் இருப்பது குறித்து சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை செய்ய போர்டுகள் கூட இல்லாததுமே இச்சாவுகளுக்குக் காரணமாகும்.