துரோணாச்சாரியார் இப்படி செய்யலாமா? கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பொது மக்களின் வரிப் பணத்தை கோடிக்கணக்கில் செலவிட்டு பா.ஜ.க. அரசு செய்யும் விளம்பரங்கள்நியாயமற்றவை என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அரசியல் ஆதாயத்துக்காக பொது மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் இறைத்து, வீணடித்து பத்திரிக்கைகளில்விளம்பரங்கள் (India Shining விளம்பரம்) செய்து வருகிறது பா.ஜ.க. அரசு. ஜனநாயக நெறிகளைக் காப்பதில்துரோணாச்சாரியாராகக் கருதப்பட்ட பிரதமர் வாஜ்பாய், பா.ஜ.கவினரின் இந்தச் செயல்களுக்கு தலையாட்டிக்கொண்டிருப்பது வேதனை தருகிறது.

புதிதாய் பொறுப்பேற்ற தலைமை தேர்தல் கமிஷ்னர் கூட, மக்களின் வரிப் பணத்தை எந்த அரசும் ஓட்டுவேட்டைக்காக செலவிடக் கூடாது என்று கூறியிருக்கிறார்.

மகாபாரதத்தில் தங்களது குருவான துரோணாச்சாரியாரை வெல்வதற்காக அவரிடம் மகன் இறந்துவிட்டதாகபொய்ச் செய்தி சொல்லி மயக்கமடையச் செய்தனர் பாண்டவர்கள். அவர் மயங்கிய நேரத்தில் விஜயன் வில்லால்அடித்தான். அதே நிலைமையில் தான் இப்போது வாஜ்பாயும் இருக்கிறார். பா.ஜ.கவினரின் நெறி மீறியசெயல்களைத் தடுக்காமல் அவர்களின் இஷ்டத்துக்கு தலையாட்டிக் கொண்டிருக்கிறார்.

மங்கை சூதகமானால் கங்கையில் முழுகலாம், கங்கையே சூதகமானால் எங்கே முழுகுவது?

திமுக கூட்டணியில் இடப் பகிர்வில் ஏதோ பெரும் குழப்பம் இருப்பது போல சிலர் பொய்ப் பிரச்சாரம் நடத்திவருகின்றனர். இதையெல்லாம் கேட்டு திமுகவினர் குழம்பிவிடக் கூடாது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அடுத்த பிரதமராக்குவோம். இதற்கு திமுக தொண்டர்கள் பாடுபடவேண்டும். தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் அனைத்துத் தொகுதிகளிலும் வெல்ல திமுக தொண்டர்கள்உழைத்திட வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+