இலங்கை நாடாளுமன்ற கலைப்புக்கு புலிகள் கண்டனம்
கொழும்பு:
நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு திடீர் தேர்தலுக்கு அதிபர் சந்திரிகா குமாரதுங்கா உத்தரவிட்டிருப்பதுஅமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு என விடுதலைப் புலிகள் இயக்கம் கூறியுள்ளது.
இது குறித்து புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்த பின்னடைவுக்கு மத்தியிலும் போர் நிறுத்த உடன்பாட்டை மதித்து நடக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். 30ஆண்டு கால இனப் போரை முடிவுக்குக் கொண்டு வர முயன்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் ஆட்சியைக்கலைத்ததன் மூலம், மீண்டும் பேச்சுவார்த்தைகள் தொடங்குவதை தாமதப்படுத்தியுள்ளார் அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா.
நாடாளுமன்றம் கலைப்பும் திடீர் இடைத் தேர்தலும் அமைதி முயற்சிகளுக்கு விழுந்துள்ள மிகப் பெரிய அடி. இந்தஅரசியல் குழப்பத்துக்கும், ஸ்திரமின்மைக்கு இடையிலும் நாங்கள் எங்களது போர் நிறுத்தம் மற்றும் அமைதிஉடன்பாட்டை தொடர்ந்து மதித்து நடப்போம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications