வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடங்கியது
சென்னை:
சென்னையில் உள்ள 14 சட்டசபைத் தொகுதிகள் மற்றும் உசிலம்பட்டி, கொளச்சல் ஆகிய சட்டசபைத்தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தொடங்கி நடந்து வருவதாக தமிழக தலைமைத் தேர்தல்அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி கூறியுள்ளார்.
தமிழக வாக்காளர் பட்டியலில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையருக்கு திமுகபொதுச் செயலாளர் அன்பழகன் கடந்த மாதம் புகார் மனு அனுப்பியிருந்தார். இதைத் தொடர்ந்து தேர்தல்ஆணையக் குழு தமிழகம் வந்து வாக்காளர் பட்டியலை சரி பார்த்து சென்றது.
அந்தக் குழுவினர் கொடுத்த அறிக்கையின்படி சென்னையில் உள்ள 14 சட்டசபைத் தொகுதிகளிலும் வாக்காளர்பட்டியலை முழுவதுமாக திருத்தியமைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதேபோல, மதுரை மாவட்டம்,உசிலம்பட்டி, கன்னியாகுமரி மாவட்டம் கொளச்சல் ஆகிய தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலைதிருத்தியமைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்தத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கி நடந்து வருவதாக சாரங்கி கூறியுள்ளார்.