இந்த ஆண்டில் 12,000 ஆசிரியர்கள் நியமனம்: செம்மலை
சென்னை:
நடப்பாண்டில் 12,000 புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கல்வி அமைச்சர் செம்மலை தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இது தொடர்பாக செம்மலை தெரிவித்ததாவது:
கிராமங்களில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதை அறிந்து, காலியிடங்களை உடனேநிரப்ப முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். ஓர் ஆசிரியர் பள்ளிக்கூடங்களே இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் 12,000ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 5638 ஆசிரியர்களும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6362ஆசிரியர்களும் நியமிக்கப்படுவர். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் மூலமாக தேர்வுசெய்யப்படுவர்.
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் உள்ள பதிவு மூப்பு அடிப்படையில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்படுவர். அரசுக்கு நிதி நெருக்கடி உள்ளபோதிலும், மற்ற துறைகளில் புதிய நியமனங்களுக்குத் தடை உள்ள போதிலும்ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications