அதிகார சண்டை தீராவிட்டால் பொருளாதார உதவி ரத்து: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
கொழும்பு:
அதிகாரச் சண்டை முடிவுக்கு வராவிட்டால், போரினால் பாதிப்படைந்த பகுதிகளைச் சீரமைக்க பொருளுதவிசெய்வதை உலக நாடுகள் நிறுத்த வேண்டியது வரும் என்று அமெரிக்கா இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக நாடுகள் முன்னேற்றத்திற்கான அமெரிக்க ஏஜென்சியின் துணை நிர்வாகி மார்க் வார்ட் செய்தியாளர்களிடம்இது தொடர்பாகக் கூறியதாவது:
அயல்நாடுகளின் பொருளாதார உதவி மற்றும் பொருளாதார முதலீடு சீரழிந்திருக்கும் இலங்கைப்பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த உதவும். ஆனால், இலங்கை அரசியலில் நிலவும் அதிகாரச் சண்டை அத்தகையஉதவி கிடைப்பதற்கு முட்டுக் கட்டை போடும் அபாயம் உள்ளது.
இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என்பதே எங்களது விருப்பமாகும். அதற்காக 120 மில்லியன் டாலர்மதிப்பில் ஒரு திட்டத்தை தயாரித்துள்ளோம். அதே நேரத்தில் விடுதலைப் புலிகள் வசமுள்ள வடகிழக்குமாகாணத்தில் உள்ள பகுதிகளைப் புணரமைக்க நேரிடையாக அவர்களிடம் நிதியளிக்க மாட்டோம் என்றும்தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications