மரண தண்டனை விதிக்கப்பட்ட வீரப்பன் கூட்டாளிகள் ஜனாதிபதியிடம் கருணை மனு
பெங்களூர்:
மரண தண்டனை விதிக்கப்பட்ட வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர், பொது மன்னிப்புக் கோரி குடியரசுத் தலைவர்அப்துல் கலாமுக்கு கருணை மனு அனுப்புகிறார்கள்.
09-04-1993ம் தேதி பாலாறு அருகே நடந்த கன்னிவெடி தாக்குதலில் போலீஸார் 21 பேர் கொலைசெய்யப்பட்டனர். இது தொடர்பாக வீரப்பன் கூட்டாளிகள் சைமன், ஞானபிரகாஷ், மாதய்யா, பிவிலேந்திராஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மைசூர் தடா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து நான்கு பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் 4 பேரின் ஆயுள் தண்டனையை தூக்கு தண்டனையாக மாற்றி தீர்ப்பளித்தது.
இதனையடுத்து, 4 பேரையும் ஏப்ரல் 16ம் தேதி பெல்காம் மத்திய சிறையில் தூக்கிலிட மைசூர் மாவட்ட நீதிபதிஹெக்டே உத்தரவு பிறப்பித்தார். இந் நிலையில், குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்ப 4 பேரும் முடிவுசெய்துள்ளனர்.
கருணை மனு அனுப்ப தங்களுக்கு 60 நாட்கள் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கர்நாடக ஆளுநர்சதுர்வேதிக்கு அவர்கள் கடிதம் எழுதியிருக்கிறார்கள். அக் கடிதத்தை மைசூர் மத்திய சிறை கண்காணிப்பாளர்விசுவநாதய்யா, பெங்களூர் மத்திய சிறை அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளார்.