27 தமிழக மீனவர்களை கடத்திய இலங்கை மீனவர்கள்

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டனம்:

நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 27 மீனவர்களைஇலங்கை மீனவர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.

கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு இத்தனை காலமாக இலங்கைகடற்படையால்தான் ஆபத்து நேரிட்டு வந்தது. ஆனால் சமீப காலமாக இலங்கைமீனவர்களும் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

அவ்வப்போது தமிழக மீனவர்களைத் தாக்கி மீன்கள், வலைகளைப் பறித்துச் செல்வது, கடத்திச் செல்வதுஆகிய செயல்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள்தமிழர்கள் என்பதுதான் வேதனை.

இந் நிலையில், நாகை மாவட்டம் கோடியக்கரை பகுதியில் ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த30 மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை மீனவர்கள், தமிழக மீனவர்களைக் கத்தியைக் காட்டிமிரட்டினர். பின்னர் அவர்களில் 27 பேரை கத்தி முனையில் கடத்திச் சென்றனர்.அவர்களின் 5 படகுகளையும் இலங்கை மீனவர்கள் பிடித்துச் சென்று விட்டனர்.

இலங்கை மீனவர்களிடமிருந்து தப்பி வந்த 3 மீனவர்களும் இதுகுறித்து நாகை மாவட்டஆட்சித் தலைவரிடம் புகார் செய்துள்ளனர்.

முன்னதாக இவர்களை இலங்கைக் கடற்படை பிடித்துச் சென்றதாக தகவல் வந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+