சென்னை மாணவியின் கின்னஸ் முயற்சி!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையைச் சேர்ந்த மாணவி நந்தினி 24 மணி நேரம் தொடர்ந்து காந்தியடிகள்குறித்த கட்டுரை எழுதி சாதனை படைத்துள்ளார். தனது சாதனைக்கு கின்னஸ்அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அவர் உள்ளார்.
சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 11ம் படித்துவருபவர் நந்தினி. இவருக்கு கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வம்ஏற்பட்டது. தொடர்ந்து கட்டுரை எழுதி சாதனை படைக்க முடிவு செய்தார்.
இதையடுத்து வியாழக்கிழமை காலை 10 மணிக்கு காந்தியடிகள் குறித்த கட்டுரையைஎழுத ஆரம்பித்தார். இடைவிடாமல் கட்டுரையை எழுதிய அவர் வெள்ளிக்கிழமை காலை10 மணிக்குத்தான் பேனாவை கீழே வைத்தார்.
இந்தச் சாதனையை பள்ளி ஆசியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினர்.
நந்தினியின் இந்த சாதனையை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications