வறட்சி நிலைமை: மத்திய குழு இன்று தமிழகம் வருகை

Subscribe to Oneindia Tamil

தமிழகத்தின் வறட்சி நிலை குறித்து ஆராய மத்தியக் குழு இன்று சென்னை வருகிறது.

தேசியக் கூட்டுறவு வளர்ச்சி வாரியத்தின் தவைவர் தினேஷ் ராய் தலைமையில் வரும் இக் குழுவில்விவசாயத்துறை, கால்நடைத்துறை, நீர்வளத்துறையைச் சேர்ந்த 9 அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக வேளாண்மைத்துறை, பொதுப் பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைநடத்தும் இக் குழு பின்னர் முதல்வர் ஜெயலலிதாவையும் சந்தித்துப் பேசவுள்ளது.

இதைத் தொடர்ந்து நாளை இக் குழு மூன்றாகப் பிரிந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலையைநேரில் ஆய்வு செய்யவுள்ளது. இரு நாட்கள் ஆய்வு செய்த பின்னர் மீண்டும் தமிழக அதிகாரிகளுடன் இக் குழுஆலோசனையில் ஈடுபடும்.

இதையடுத்து டெல்லி திரும்பும் இக் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்யும்.

தமிழகத்தில் வறட்சி நிலையை சமாளிக்க ரூ. 1,584 கோடியையும் 10.8 லட்சம் டன் அரிசியையும் மாநில அரசுகோரியுள்ளது.

ஆய்வுக் குழு வழங்கும் அறிக்கையைப் பொறுத்து நிதியையும் அரிசியையும் தமிழகத்துக்கு மத்திய அரசுவழங்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+