டெல்லி வானில் அமெரிக்க ராணுவ விமானத்தில் தீ
டெல்லி:
111 வீரர்களுடன் டெல்லியில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானப் படை விமானத்தின் என்ஜினில் தீப்பிடித்தது. இதையடுத்து அந்த விமானம் மீண்டும் மிக அவசரமாக டெல்லியில் விமான நிலையத்திலேயேதரையிறங்கியது.
குவாலியரில் நடக்கும் இந்திய-அமெரிக்க கூட்டு விமானப் படை போர்ப் பயிற்சிக்காக எப்-15 ரக போர்விமானங்கள் உள்பட பல அமெரிக்க விமானங்கள் இந்தியா வந்துள்ளன. இதில் கே.சி-10 ரக ஏர் டேங்கர்விமானமும் ஒன்று. இது வானிலேயே பிற விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் விமானமாகும்.
இன்று இந்த விமானம் குவாலியரில் இருந்து டெல்லி வந்தது. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில்எரிபொருள் நிரப்பிக் கொண்டு பகல் 2.10 மணிக்கு அந்த விமானம் குவாம் தீவில் உள்ள அமெரிக்க விமானதளத்துக்குக் கிளம்பியது. அதில் 111 அமெரிக்க ராணுவ வீரர்கள் இருந்தனர்.
பறக்க ஆரம்பித்த 16 நிமிடங்களில் அதன் ஒரு என்ஜினில் தீப் பிடித்துக் கொண்டது. இதையடுத்து மீண்டும் இந்திராகாந்தி விமான நிலையத்துக்குத் திரும்பி வருவதாக பைலட் தகவல் தந்தார்.
உடனடியாக எமர்ஜென்சி லேண்டிங்குக்கான அவசர நிலைக்கு விமான நிலையம் தயாரானது. 2.42 மணிக்கு அந்தவிமானம் பத்திரமாகத் தரையிறங்கியது. உடனடியாக தீயும் அணைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications