திமுகவில் சேர்ந்தார் ப.சிதம்பரம் கட்சி எம்.எல்.ஏ

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளோர் திமுகவில் சேர்ந்து வருவதாக அக் கட்சியின் தலைவர் கருணாநிதிகூறினார்.

ப.சிதம்பரம் தலைமையிலான காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் முக்கியத் தலைவரும், அந்த அமைப்பின் ஒரேஎம்.எல்.ஏவுமான புரசைவாக்கம் ரங்கநாதன் இன்று திமுகவில் இணைந்தார். அவருடன் அவரது ஆதரவாளர்களும்திமுகவில் இணைந்தனர்.

காலையில் அண்ணா அறிவாலயம் வந்த அவர் கருணாநிதி, அன்பழகன், ஆற்காடு வீராசாமி ஆகியோருக்குபொன்னாடை அணிவித்தார்.

அப்போது கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளோர்திமுகவில் இணையலாம். அப்படித்தான் பலரும் இணைந்து வருகிறார்கள். இன்று ரங்கநாதன் இணைந்துள்ளார்என்றார்.

கடந்த தேர்தலில் ப.சிதம்பரத்தின் கட்சி சார்பில் சென்னை புரசைவாக்கம் தொகுதியில் திமுகவின் உதயசூரியன்சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர் ரங்கநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.

உதயமானது புதிய கட்சி:

இதற்கிடையே தமிழகத்தில் மேலும் ஒரு அரசியல் கட்சி உதயமாகியுள்ளது.

என்.இளங்கோவன் என்பவர் இந்தக் கட்சியை உருவாக்கி அதன் தலைவராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.கட்சியின் கொடி மற்றும் பெயர் அறிமுகம் சென்னையில் நடந்தது. மக்கள் நலனை கருத்தில் கொண்டு இந்தக் கட்சிஉருவாக்கப்பட்டுள்ளதாக இளங்கோவன் கூறினார். கட்சியின் பெயர் தேசிய ஜனநாயக மக்கள் கட்சியாம்!

வாழ்க ஜனநாயகம் !!

Mail this to a friend  Post your feedback  Print this page 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+