மதமாற்ற தடை சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்: ராமதாஸ்
சென்னை:
மதமாற்றத் தடைச் சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை விவரம்:
தேர்தல் வந்துவிட்டது. ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் என்பது மாதிரி திமுக-பா.ம.க கூட்டணி என்னும்சூறாவளியைத் தாக்குப்பிடிக்க முடியாமல் நாளோரு அறிவிப்புகள், சலுகைகளை மக்களுக்கு அள்ளி வீசிவருகிறார் முதல்வர் ஜெயலலிதா.
இதுவரை அவர் எடுத்து வந்த மக்கள் விரோத நடவடிக்கைகள் தேர்தல் பயத்தால் இப்போது காற்றில் பஞ்சு,பஞ்சாய் பறந்து கொண்டிருக்கின்றன.
இந்த அந்தர் பல்டி வரிசையில் இப்போது கோவில்களில் ஆடு, கோழி பலிட விதிக்கப்பட்ட தடையைையும்நீக்கியிருக்கிறார். இது மட்டும் போதாாது. பலியிட்டதற்காக போலீசாரால் உதைக்கப்பட்ட மக்களிடம் அரசுமன்னிப்பு கேட்க வேண்டும்.
அவர்கள் மீதும் பூசாரிகள் மீதும் போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும். அதைச் செய்தால் தான்அரசு செய்த தெய்வ நிந்தனைக்கு பரிகாரம் கிடைக்கும்.
மத நம்பிக்கையை திடீரென மதிக்க ஆரம்பித்திருக்கிறார் ஜெயலலிதா. மத நம்பிக்கையை மதித்து பலிடத் தடைவிதிக்கப்பட்ட சட்டத்தை வாபஸ் பெறுகிறாராம். உண்மையிலேயே அவருக்கு அனைத்து மதங்களின் மீதும்சமமான பார்வை இருந்தால் மதமாற்றத் தடைச் சட்டத்தை உடனே வாபஸ் பெற வேண்டும்.
மதம் மாறுவது அவரவர் உரிமை. அது ஒரு சடங்கு. நம்பிக்கை. நம்பிக்கையின் அடிப்படையில் ஒருவர் ஒருமதத்தைத் தழுவ முன் வருகிறார். மத நம்பிக்கையை மதிப்பதாக சொல்லும் ஜெயலலிதா மதமாற்றத் தடைச்சட்டத்தையும் வாபஸ் பெற வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications