நடுக்கடலில் தமிழக மீனவர்களுக்கு அரிவாள் வெட்டு: இலங்கை மீனவர்கள் மீண்டும் தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீது இலங்கைமீனவர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 6 தமிழக மீனவர்கள் காயமடைந்தனர்.

கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்களும், கடற்படை வீரர்களும்அவ்வப்போது தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது.

இந் நிலையில் வேதாரண்யம் அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம்பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்கள், இலங்கை மீனவர்களால் தாக்கப்பட்டு வெட்டுக் காயம் அடைந்துள்ளனர்.

அடைக்கலம், ஜனார்த்தனன், கிரிஸ்டோஸ், ஞானஅருள், கிதர்சன், கனிஷ்டன் ஆகிய 6 மீனவர்களும் கடந்த சிலநாட்களாக கோடியக்கரை பகுதியில் தங்கி மீன் பிடித்தனர். திங்கள்கிழமை மாலை அவர்கள் கரைக்குத் திரும்பஆரம்பித்தனர்.

அப்போது இலங்கை மீனவர்கள் அங்கு வந்து தமிழக மீனவர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். அரிவாள்களால்வெட்டினர். ஒருவழியாய் அவர்களிடம் இருந்து தப்பி இவர்கள் கரை சேர்ந்தனர்.

இதில் 6 பேரும் காயமடைந்தனர். கிரிஸ்டோஸ் மற்றும் கனிஷ்டன் ஆகியோருக்கு கையில் பலத்த காயம்ஏற்பட்டுள்ளது. இந்த இருவரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+