For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புலிகளுக்கு ஆதரவாக பேசிய வழக்கிலிருந்து நெடுமாறன் விடுதலை

By Staff
Google Oneindia Tamil News

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே நடந்த பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக தொடரப்பட்டவழக்கிலிருந்து தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 1998ம் ஆண்டு பூலத்தூர் என்ற இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில், விடுதலைப் புலிகளுக்குஆதரவாகவும், மத்திய, மாநில அரசுகளுக்கு விரோதமாகவும் பேசியதாக கூறி நெடுமாறன் மீது திண்டுக்கல்போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு திண்டுக்கல் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்திஇன்று தீர்ப்பளித்தார்.

நெடுமாறன் மீதான புகார்கள் போதிய ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அவரை விடுதலை செய்துநீதிபதி ஆனந்தி உத்தரவிட்டார்.

இந்தத் தீர்ப்பையொட்டி, நெடுமாறன் திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். ஏரளமான அவரதுஆதரவாளர்களும் நீதிமன்றத்தில் குவிந்திருந்தனர். அவர் விடுவிக்கப்பட்ட செய்தி கேட்டதும் நீதிமன்றத்தின்வெளியே அவர்கள் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடினர். நெடுமாறனுக்கு ஆதரவாகவும் கோஷமிட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X