ஜெ.-வெங்கைய்யா நாயுடு சந்திப்பு
சென்னை:
அகில இந்திய பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு முதல்வர் ஜெயலலிதாவை இன்று சந்தித்து, தேர்தல் பிரச்சாரம் குறித்துஆலோசனை நடத்தினார்.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவும், பா.ஜ.கவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. இதில் அதிமுக 33தொகுதிகளிலும், பா.ஜ.க. 7 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் தொடர்பாக பா.ஜ.க.தரப்பில் அதிருப்தி நிலவுகிறது.
இந் நிலையில் வெங்கைய்யா நாயுடு ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு 30நிமிடங்கள் நீடித்தது. தொகுதி பங்கீடு தொடர்பான பா.ஜ.கவினரின் அதிருப்தி குறித்தும், பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர்அத்வானி ஆகியோருடன் இணைந்து ஜெயலலிதா பிரச்சாரம் செய்வது குறித்தும், பிரச்சார வியூகம் குறித்தும் ஜெயலலிதாவுடன்ஆலோசனை நடத்தினார் என்று பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக சென்னை வந்த வெங்கைய்யா நாயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவுடனான தொகுதிப் பங்கீட்டில்அதிருப்தி நிலவுவது உண்மைதான்.
இப்போது அதிமுகவுடன் தேர்தல் உடன்பாடு மட்டுமே உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் சேர்ப்பது குறித்துதேர்தலுக்குப் பின் முடிவு செய்யப்படும்.
மாநில கட்சித் தலைமைகளிடம் வரும் 5ம் தேதிக்குள் வேட்பாளர்களைப் பரிந்துரைக்குமாறு கேட்டுள்ளோம். வேட்பாளர்களைப்பரிசீலித்து 10ம் தேதியிலிருந்து 15ம் தேதிக்குள் அனைத்து மாநில பா.ஜ.க. வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படும் என்றுதெரிவித்தார். பேட்டியின்போது மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், அகில இந்திய பா.ஜ.க. செயலாளர் இல.கணேசன் ஆகியோர்உடனிருந்தனர்.