திமுக கூட்டணி கொலைப்பழி கூட்டணி: பா.ஜ.க
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை தோல்வி பயம் பிடித்து ஆட்டுவதாக பா.ஜ.க. கட்சியின் மாநில பொதுச் செயலாளர் குமாரவேலுகூறியுள்ளார்.
பா.ஜ.க- அதிமுக கூட்டணியை சரணாகதி கூட்டணி என்று கருணாநிதி விமர்சித்தது தொடர்பாக குமாரவேலு நிருபர்களுக்குஅளித்த பேட்டியில் கூறியதாவது:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது கொலைப் பழி சுமத்தி திமுகவிலிருந்து வெளியேற்றினார் கருணாநிதி. ராஜிவைக்கொன்ற கட்சி என்று திமுக மீது கொலைப் பழி சுமத்தியது காங்கிரஸ். இப்போது காங்கிரஸ் மற்றும் வைகோவிடம் கருணாநிதிசரணடைந்துள்ளாரா? அல்லது அவர்கள் இவரிடம் சரணடைந்துள்ளனரா?
மொத்தத்தில் திமுக கூட்டணி கொலைப் பழி கூட்டணி. புதுக்கோட்டை தொகுதி கிடைக்காவிட்டால் மத்திய அமைச்சர்திருநாவுக்கரசர் கட்சியிலிருந்து வெளியேறி விடுவார் என்று கருணாநிதி எதிர்பார்த்தார்.
ஆனால், கட்டுப்பாடு மிக்க தொண்டனாக திருநாவுக்கரசர் விளங்கியதால் கருணாநிதியின் கனவு பலிக்கவில்லை. தோல்வி பயம்அவரை பிடித்தாட்டுவதால்தான் இப்படியெல்லாம் பேசி வருகிறார் என்றார்.












Click it and Unblock the Notifications