தமிழகத்தில் மே 10ல் மக்களவை தேர்தல்
டெல்லி: :
நாடாளுமன்றத் தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி இன்று அறிவித்தார். 4கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் மே 10ம் தேதி வாக்குப் பதிவு ஒரே கட்டமாக நடக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தல் தேதிகளை இன்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்திஅறிவித்தார். அதன்படி ஏப்ரல்20ம் தேதி முதல் கட்டத் தேர்தல் நடக்கிறது 2வது கட்டமாக ஏப்ரல் 26ம் தேதியும்,3வது கட்டமாக மே 5ம் தேதியும், கடைசி மற்றும் 4வது கட்டமாக மே 10ம் தேதியும் வாக்குப் பதிவு நடக்கிறது.
முதல் கட்டத் தேர்தலில் 16 மாநிலங்களில் உள்ள 141 தொகுதிகளுக்கும், இரண்டாவது கட்டத் தேர்தலில் 17மாநிலங்களில் உள்ள 137 தொகுதிகளுக்கும், 3வது கட்டமாக 7 மாநிலங்களில் உள்ள 83 தொகுதிகளுக்கும்வாக்குப் பதிவு நடைபெறும்.
4-வது கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.அன்றே மங்களூர் சட்டசபை இடைத் தேர்தலும் நடத்தப்படும் என்றும் கிருஷ்ணமூர்த்தி அறிவித்தார். மே 13ம்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
ஆந்திரா, கர்நாடகா மற்றும் ஒரிஸ்ஸா மாநில சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 20 மற்றும் 26ம் தேதிகளில் இருகட்டமாக நடைபெறுகிறது. சிக்கிம் சட்டசபைக்கு மே 10ம் தேதி ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படுகிறது.
தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்குவருவதாகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்தார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை அனைத்துத் தரப்பினரும் மிகக் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும்அவர் எச்சரிக்கை விடுத்தார்.












Click it and Unblock the Notifications