எஸ்மாவை நீக்குவோம்: பா.ம.கவின் தேர்தல் வாக்குறுதி
சென்னை:
நாட்டில் உள்ள நதிகளை குறுகிய காலத்தில் இணைத்து நாட்டுடமையாக்க வேண்டும். இதற்காகவும், எஸ்மாசட்டத்தை நீக்கவும் பா.ம.க. பாடுபடும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டார். கட்சித்தலைவர் ஜி.கே.மணி தேர்தல் அறிக்கையைப் பெற்றுக் கொண்டார்.
தேர்தல் அறிக்கையின் சில துளிகள்:
தொழிலாளர் வேலைநிறுத்த உரிமையை நிலை நிறுத்தும் வகையில், வேலை நிறுத்த உரிமைக்காக சட்டத்திருத்தம்கொண்டு வரப் பாடுபடுவோம்.
தமிழக அரசின் எதேச்சதிகார சட்டங்களான டெஸ்மா மற்றும் எஸ்மாவை நீக்க பாடுபடுவோம்.
அரசுத் துறைகளில் உள்ளது போலவே, தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு கொண்டு வர பாடுபடுவோம்.அதேபோல, நீதிபதி பதவிகளிலும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த பாடுபடுவோம்.
நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் சட்ட மசோதாவைநிறைவேற்ற பாடுபடுவோம்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பயிர் பாதுகாப்புத் திட்டம் கொண்டு வர பாடுபடுவோம்.
காவிரி போன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், நாட்டில் உள்ள நதிகள் அனைத்தையும்இணைத்து நாட்டுடமையாக்க வேண்டும். அதையும் குறுகிய காலதிதல் நிறைவேற்ற பாடுபடுவோம்.












Click it and Unblock the Notifications