இன்று ஜாமீனில் விடுதலை ஆகிறார் ஜனனி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட நடராஜனின் தோழி ஜனனி மற்றும் அவரது தாயார் ரமீஜா ஆகியஇருவரும் இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜனனி, ரமீஜா மற்றும் கார் டிரைவர் சதீஷ் ஆகியோரை மதுரை கருப்பாயூரணிபோலீஸார் கஞ்சா வழக்கில் கைது செய்தனர்.
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜனனி, ரமீஜாவை கடந்த மாதம் 27ம் தேதி ஜாமீனில் விடுதலைசெய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தமிழகத்தில் நீதித்துறை, நிர்வாகத்துறை ஆகியவற்றில் பெரும்கேலிக் கூத்தும், நாடகம் நடப்பதாக அப்போது உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இதனையடுத்து ஜனனியும், ரமீஜாவும் திருச்சி சிறையில் இருந்து இன்று விடுவிக்கப்படுவார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications