குறுகிய கால பயிர்க் கடன் வட்டி தள்ளுபடி: ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விவசாயிகளின் குறுகிய கால பயிர்க் கடன்கள் மீதான வட்டி மற்றும் அபராத வட்டியை தள்ளுபடி செய்வதாகதமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த சலுகை, நடப்பு சம்பா மற்றும் குறுவைக் காலத்தின்போது பயிர்க் கடன் வாங்கிய விவசாயிகளுக்குப்பொருந்தும். மாநிலத்தில் நிலவும் கடும் வறட்சி நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் தேர்தல்தான் காரணம் என்று விவசாயிகள் மத்தியில் பேச்சு உள்ளது.
மொத்தம் 6 லட்சம் விவசாயிகள் இதனால் பயனடைவர் என்றும் மொத்தம் ரூ. 62 கோடி அளவுக்கு வட்டிதள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications