முதல்வர், அமைச்சர்களுக்கு தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகள்
சென்னை:
தேர்தல் பிரசாரத்தின்போது அரசு அதிகாரிகளையோ, அரசு வாகனங்களையோ முதல்வர் மற்றும் அமைச்சர்கள்பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு மத்திய தேர்தல் ஆணையம் பல்வேறு அனுப்பியுள்ளஉத்தரவுகளின் விவரம்:
புதிய திட்டங்கள் எதையும் முதல்வரோ, அமைச்சர்களோ துவக்கி வைக்கக் கூடாது. இயற்கை சீரழிவு ஏற்பட்டால்ஒழிய முதல்வர், அமைச்சர்கள் எந்த நிவாரணத் திட்டங்களையும் அறிவிக்கக் கூடாது.
அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அமைச்சர்கள், அங்கு தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாது. தேர்தல்பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது.
தேர்தல் பணிகளில் தங்களது ஊழியர்களையும், அரசு கார்கள் போன்ற அரசு இயந்திரத்தையும் பயன்படுத்தக்கூடாது. அரசுக்குச் சொந்தமான விமானங்கள், ஹெலிகாப்டர்களை பயன்படுத்தக் கூடாது.
தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அரசு அலுவலர்களை தங்களது அறைக்கு அழைத்து அமைச்சர்கள் பேசக்கூடாது. அதேபோல, அமைச்சர்கள் தங்களது பகுதிக்கு வந்தால், அவர்களை மரியாதை நிமித்தமாகக் கூட தேர்தல்பணியில் ஈடுபட்டிருக்கும் அலுவலர்கள் சந்திக்கக் கூடாது.
தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் இன்றி தேர்தல் தொடர்பான அதிகாரிகளை மாற்றம் செய்யக்கூடாது.மாவட்டங்களுக்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும் முதல்வரை கலெக்டர்கள் வரவேற்கக் கூடாது.
அரசினர் விருந்தினர் விடுதி, அரசினர் ஓய்வு இல்லங்கள், பொது மைதானங்கள் ஆகியவற்றை ஆளுங்கட்சியினர்மட்டுமே பயன்படுத்தக் கூடாது. அனைத்துக் கட்சியினருக்கும் அவற்றை உபயோகப்படுத்துவதில் சம பங்குஅளிக்கப்பட வேண்டும்.
அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்களை தேர்தல் ஏஜெண்டுகளாக நியமிக்கக் கூடாது. தேர்தலில் நிற்கவோ,வாக்களிக்கவோ தகுதியில்லாத நபர்களைத் தேர்தல் ஏஜெண்டகளைகளாக வேட்பாளர்கள் நியமிக்கக் கூடாது.தேர்தல் ஏஜெண்டகள் செய்யும் தவறுகளுக்கு வேட்பாளரே பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு கடுமையான பல்வேறு கட்டுப்பாடுகளை அரசுக்கும், அமைச்சர்களுக்கும் தேர்தல் ஆணையம்பிறப்பித்துள்ளது.
நம்மவர்கள் இதையெல்லாம் மதிப்பார்களா?