For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தனியார் இடங்களில் தேர்தல் விளம்பரப் பலகைகள் வைக்க தடை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அரசு மற்றும் தனியார் இடங்களில் தேர்தல் விளம்பரப் பலகைகளை வைக்கக் கூடாது என்று தமிழகத் தலைமைத்தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி தடை விதித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தனியார் சுவர்களிலும், இடங்களில் அனுமதியின்றி தேர்தல் பிரசாரங்களைஅரசியல் கட்சியினர் எழுதி வருவதாக பல்வேறு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.

தனியார் சுவர்களில் அனுமதியின்றி தேர்தல் பிரசாரங்களை எழுதக் கூடாது. அவ்வாறு செய்தால் கடும்நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, அரசு சுவர்களிலும் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளக் கூடாது.

தேர்தல் விளம்பரப் பலகைகளைப் பொருத்தவரை, தனியார் இடங்களில், அவர்களே அனுமதி கொடுத்தாலும் கூடவிளம்பரப் பலகைகளை வைக்கக் கூடாது. மீறி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபோன்ற விதிமீறல்கள் குறித்துப் புகார் தெரிவிக்க விரும்புவோர் தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைத்தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் புகார்ப் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

அங்கு வந்து தங்களது புகார்களை சமர்ப்பிக்கலாம். புகார் கொடுப்பவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்என்று தெரிவித்துள்ளார் சாரங்கி.

இதற்கிடையே மாநிலம் முழுவதும் தனியார், அரசு சுவர்களைப் பிடிக்க அனைத்துக் கட்சிகள் இடையே போட்டாபோட்டி நடந்து வருகிறது. பல இடங்களில் அடிதடியும் நடக்கிறது.

தங்களது சுவர்களை நாறடிக்கும் கரைவேட்டிளை தட்டிக் கேட்டால் தேவையில்லாத பிரச்சனை வரும் என்பதால்பெரும்பாலான பொது மக்கள் அமைதியாக இருந்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X