புலிகளின் தீவிரவாதத்தை ஆதரித்தார் வைகோ: பொடா குழுவிடம் தமிழக அரசு விளக்கம்
டெல்லி:
விடுதலைப் புலிகளின் தீவிரவாத செயல்களை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆதரித்துப்பேசினார் என்று பொடா மறுஆய்வுக் குழுவிடம் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
பொடா சட்டத்தின்கீழ் வைகோ, நக்கீரன் கோபால் ஆகியோர் கைது செய்யப்பட்டது தொடர்பாக, நீதிபதி சகாரியாதலைமையிலான பொடா மறுஆய்வுக் குழு விசாரித்து வருகிறது. இதில் வைகோ வழக்கு தொடர்பாக தமிழகஅரசின் விளக்கத்தை வழக்கறிஞர் வைத்தியநாதன் நேற்று பொடா குழுவிடம் தெரிவித்தார்.
அவர் தனது வாதத்தில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை 29-06-2002ம் தேதிதிருமங்கலத்தில் நடந்த கூட்டத்தில் வைகோ ஆதரித்துப் பேசினார். விடுதலைப் புலிகளுக்கு தமிழக மக்கள்தங்களால் இயன்றதை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
நான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளனாக இருந்தேன், இன்று இருக்கிறேன், நாளையும் இருப்பேன் என்றும்பேசினார். எனவே, தமிழக அரசு பொடா சட்டப்படி வைகோ மீது நடவடிக்கை எடுத்தது சரியே என்று கூறினார்.












Click it and Unblock the Notifications