கற்பழிப்பு முயற்சி: போலீசுக்கு எதிராக விந்தியா வழக்கு
சென்னை:
ஓசூர் ஹோட்டலில் நடந்த கற்பழிப்பு முயற்சி குறித்து ஓசூர் போலீஸில் நேரடியாக புகார் கொடுத்தும் ஒருநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்நடிகை விந்தியா. இது தொடர்பாக ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு காவல்துறைக்கு உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
நடிகை விந்தியா கன்னி நிலா படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ஓசூர் சென்றிருந்தார். கடந்த மாதம் 22ம் தேதிஅவர் ஓசூரில் உள்ள சிவரஞ்சனி என்ற ஹோட்டலில் தங்கியிருந்தபோது, ஓசூரைச் சேர்ந்த தொழிலதிபரும்,சினிமா பைனான்சியருமான கமல்ராஜ் என்பவர் விந்தியாவை பலாத்காரம் செய்ய முயன்றார்.
இது தொடர்பாக கமல்ராஜும் அவரது அடியாட்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந் நிலையில் இன்று சென்னைஉயர் நீதிமன்றத்தில் விந்தியா ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், தன்னை கமல்ராஜ் கற்பழிக்க முயன்றதாகஓசூர் காவல் நிலையத்தில் நேரடியாக சென்று புகார் கொடுத்தும் காவல்துறையினர் உரிய நடவடிக்கைஎடுக்கவில்லை. கமல்ராஜைக் காப்பாற்றும் வகையில் அவர்கள் செயல்பட்டனர் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அசோக் குமார், ஒரு வாரத்திற்குள் விந்தியா வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்டநடவடிக்கைகள் குறித்து பதில் அளிக்குமாறு கூறி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications