தேர்தல் வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து திமுக வேட்பாளருக்கு விலக்கு
சென்னை:
சைதாப்பேட்டை இடைத் தேர்தலின்போது நடந்த மோதல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு நேரில்ஆஜராவதிலிருந்து புதுக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் ரகுபதிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சைதாப்பேட்டை சட்டசபைத் தொகுதிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இடைத் தேர்தலின்போது திமுகமற்றும் அதிமுகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்ரகுபதி, மிசா பாண்டியன், கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்ட 6 பேர் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது.
சைதை 23-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கல்யாணசுந்தரம்என்பவரைத் தவிர மற்ற யாரும் ஆஜராகவில்லை. மாறாக ரகுபதி சார்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் புதுக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவேண்டியுள்ளதாகவும், எனவே மே 10ம் தேதி வரை தன்னால் நீதிமன்ற விசாரணையில் பங்கேற்க முடியாதுஎன்றும், நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறும் அவர் கோரியிருந்தார்.
இதை ஏற்ற நீதிபதி, ரகுபதி நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டார். மே 18ம் தேதிக்குவிசாரணை தள்ளி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications