ஈரோட்டில் 23,000 வாக்காளர்கள் நீக்கம்: கட்சிகள் அதிருப்தி!
ஈரோடு:
ஈரோட்டில் 23,000 வாக்காளர்களை நீக்கியதை வாபஸ் பெற வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள்கோரிக்கை விடுத்துள்ளன.
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் போலி வாக்காளர்களை அடையாளம் கண்டு அவர்களைவாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. ஆங்காங்கே போலிவாக்காளர்களை நீக்கியும் வருகின்றனர்.
அந்த வகையில், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்காளர் பட்டியலிலிருந்து 23,000வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. ஆனால் இவர்கள் போலி வாக்காளர்கள் இல்லை,உண்மையான வாக்காளர்கள் என்று புகார் எழுந்துள்ளது.
இந்த 23,000 வாக்காளர்களும் பல காலமாக ஓட்டுப் போட்டு வருகிறார்கள். முகவரி மாற்றம் உள்ளிட்டவழக்கமான காரணங்களினால் இவர்கள் குறிப்பிட்ட முகவரியில் இல்லை. ஆனால் இவர்களை போலிவாக்காளர்கள் என்று கூறி தேர்தல் ஆணையம் நீக்கி விட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் புகார் கூறிஉள்ளன.
உடனடியாக 23,000 பேரையும் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்டஆட்சித் தலைவருக்கு அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.












Click it and Unblock the Notifications