கார், நகை, பணத்தை திரும்பக் கேட்கிறார் கஞ்சா ஜனனி

Subscribe to Oneindia Tamil

மதுரை:

போலீஸார் தன்னிடமிருந்து பறிமுதல் செய்த மிட்சுபிஸி லேன்சர் கார், நகைகள், ரூ. 18,000 பணம் ஆகியவற்றைதிரும்ப ஒப்படைக்கக் கோரி மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் சசிகலாவின் கணவர் நடராஜனின்தோழி ஜனனி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த ஜனனி, அவரது தாயார் ரமீஜா மற்றும் கார் டிரைவர் சதீஷ் ஆகியோரை கடந்த ஆண்டு மதுரைகருப்பாயூரணி போலீஸார் கஞ்சா வழக்கில் கைது செய்தனர்.

சமீபத்தில் ஜனனியும், ரமீஜாவும் ஜாமீனில் விடுதைல செய்யப்பட்டனர். அதேபோல சதீஷுக்கும் மதுரைபோதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் ஜாமீன் பணத்தைக் கட்ட யாரும் முன் வராதகாரணத்தால் அவர் தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார்.

இந் நிலையில், ஜனனி மதுரை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், போலீஸார் எனது வீட்டிலிருந்து கைப்பற்றியதாகக் கூறும் ரூ. 1.40 கோடி பணம் நெல்லையைச் சேர்ந்தஜமீன்தாரான தொழிலதிபர் ஜெகதீஷ் ராஜாவிடம் ஒப்படைக்க வேண்டும். அது அவருடைய பணம். மீதமுள்ள ரூ.18,000 பணம் என்னுடையது. அதை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்.

அதேபோல போலீஸார் பறிமுதல் செய்துள்ள எனக்குச் சொந்தமான 21 பவுன் நகைகள், கார் ஆகியவற்றையும்திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார் ஜனனி.

ஜனனியிடம் 21 பவுனுக்கும் அதிகமான நகைகள் பிடிபட்டதாகக் கூறப்படுகிறது. அவற்றை தமிழக அதிகாரமையத்தின் நம்பர் டூ லவட்டிவிட்டதாகத் தெரிகிறது. கணக்கில் காட்டப்பட்ட நகைகள் மட்டுமே 21 பவுன்என்கிறது உள் வட்டாரம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+