அரசியல்வாதிகளுக்கு தேர்தல் கமிஷன் மேலும் ஒரு தடை
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்து விட்டதால், அரசியல் தலைவர்களை வைத்து அரசு சார்பிலானவிழாக்கள், கூட்டங்கள், நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தமிழகதலைமை தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக சாரங்கி அனுப்பியுள்ள உத்தரவில், மாவட்ட வளர்ச்சிக் கழகக் கூட்டம், ஜில்லா கூட்டம், பஞ்சாயத்துக் கூட்டம்ஆகியவற்றுக்கு அரசியல் தலைவர்கள், அரசியல்வாதிகளை அழைக்கக் கூடாது.
இந்தக் கூட்டங்களுக்கு மூத்த அதிகாரிகள் மட்டுமே தலைமை தாங்க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் அரசியல்சம்பந்தப்பட்டவர்கள் கூட்டங்களுக்கு வரக் கூடாது.
வறட்சி போன்ற முக்கியப் பிரச்சினைகளை விவாதிக்க மட்டுமே இக்கூட்டங்கள் கூட்டப்பட வேண்டும். நிதி ஒதுக்கீடு, புதியதிட்டங்களை அறிவிப்பது ஆகியவை கூடவே கூடாது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications